பத்தொன்பது நாள் விருந்து (#11330)

*(விருந்து, அது வெறும் தண்ணீருடன் ஆனபோதிலும் மாதத்திற்கு ஒரு முறை (நடத்தப்பட) உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது: மனிதர்களின் இதயங்களை ஒன்றிணைக்க கடவுள் உண்மையாகவே, நோக்கங் கொண்டுள்ளார்—அதற்கு விண்ணுலக, மண்ணுலக சாதனங்கள் ஒவ்வொன்றும் தேவைப்பட்டப் போதிலுங்கூட). 

—பஹாவுல்லா, கித்தாப்-இ-அக்டாஸ் 

கடவுளே! பிணக்குகளுக்குக் காரணமாயிருந்த எல்லாக் கூறுகளையும் அகற்றி, ஒற்றுமைக்கும் இணக்கத்திற்கும் காரணமா-யிருக்கும் அனைத்தையும் எங்களுக்கு ஏற்பாடு செய்வீராக. கடவுளே! தெய்வீக நறுமணத்தினை எங்கள்பால் பொழியச் செய்து இக்கூட்டத்தை ஒரு தேவலோகக் கூட்டமாக ஆக்கிடுவீராக. சகல உணவுகளையும் நன்மைகளையும் எங்களுக்குத் தந்தருள்வீராக. அன்பெனும் அமுதத்தை எங்களுக்குத் தயாரித்து அருள்வீராக. அறிவெனும் அமுதத்தை எங்களுக்குத் தந்தருள்வீராக. தெய்வீக ஞானமெனும் அமுதத்தை எங்கள்பால் அருள்வீராக.

-`Abdu'l-Bahá
-----------------------

